சுங்கை பட்டாணி:
சுங்கை மெர்போக்கை ஒட்டிய சதுப்புநிலக் காடுகளில் சுமார் 15 சட்டவிரோத குப்பைத் தளங்கள் அடையாளம் காணப்பட்டன.
பொறுப்பற்ற தரப்பினரின் இந்த நடத்தை, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் அமைப்புக்கு தீங்கு விளைவிப்பதுடன், மீனவர்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமான கடல்வாழ் உயிரினங்களை அச்சுறுத்துவதாக கோலா மூடா மாவட்ட அதிகாரி டத்தோ அப்துல் கபார் யஹ்யா கவலை தெரிவித்தார்.
“கண்காணிப்பின் அடிப்படையில், சுங்கை மெர்போக்கில் சுமார் 15 சட்டவிரோத குப்பை கொட்டும் தளங்கள் உள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலான கழிவுகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அன்றாட வீட்டுக் கழிவுகள் என்றும் அவர் சொன்னார்.
இந்த பிரச்சினை நீண்ட காலமாக, அதாவது 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது,” என்று அவர் இன்று ஆற்றங்கரையில் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் தளங்களை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.




















