தொலைத்தொடர்பு கேபிள்களை திருடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு பரிசீலிக்கிறது

கோலாலம்பூர்:

சேவைக்கு இடையூறு விளைவிக்கும் என்பதையும் பொருட்படுத்தாமல், தொலைத்தொடர்பு கேபிள்களை திருடுபவர்களுக்கு எதிராக கடுமையான அபராதம் விதிக்க அரசு பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பில் சட்டத்துறை தலைவர் அலுவலகம் ஆய்வு செய்து வருவதாகவும், தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் திருத்தத்தில் இந்த தண்டனை முன்மொழியப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் பாஃஹ்மி பாஃட்சில் தெரிவித்தார்.

“தொடர்பு அமைச்சகம் மற்றும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் (MCMC) குழுவை ஆய்வு செய்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை (தண்டனை) வழங்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன், தற்போது, சட்டத்திற்கான வரைவு திருத்தம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் நெட்வொர்க் சேவை தரத்தின் (தொலைத்தொடர்பு) அம்சங்களில் பல விதிகளை உள்ளடக்கியது என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here