நடிகைகள் நயன்தாரா மற்றும் நஸ்ரியா இருவரும் பத்து வருடங்கள் கழித்து நேரில் சந்தித்துள்ளனர். முத்தமழை பொழிந்து இவர்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
’ராஜா ராணி’ படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா மற்றும் நஸ்ரியா இருவரும் நடித்திருந்தனர். இருவருடைய கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. நயன்தாரா மற்றும் நஸ்ரியா இருவருக்கும் படத்தில் காம்பினேஷன் காட்சிகள் இல்லை என்றாலும் இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருந்தது.

ஃபஹத்துடன் சேர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டு வருபவர் சமீபகாலத்தில் சினிமாவில் கம்பேக் கொடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் நஸ்ரியா, நயன்தாரா, பஹத் மற்றும் விக்னேஷ்சிவன் நால்வரும் நேரில் சந்தித்து இருக்கின்றனர். நயன் மற்றும் நஸ்ரியா இருவரும் முத்தமழை பொழிந்துள்ள புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.























