ஜோகூரில் அனுமதியின்றி ஏஜென்சி நடத்திய குற்றச்சாட்டில் மூவர் குடிநுழைவுத் துறையால் கைது

ஜோகூர் பாரு:

தொழிலாளர் துறையின் அனுமதியின்றி வெளிநாட்டு தொழிலாளர்கள் மேலாண்மை நிறுவனத்தை நடத்தியதற்காக நம்பப்படும் மூன்று வெளிநாட்டினரை ஜோகூர் குடிவரவுத் துறை கைது செய்துள்ளது.

கடந்த வியாழன் (ஜூலை 4) மதியம் 2 மணியளவில் பெர்மாஸ் ஜெயாவில் உள்ள இரட்டை அடுக்கு கடை ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது, குறித்த மூவரும் கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் 28 முதல் 50 வயதுடைய பாகிஸ்தானியர்கள் என்றும் மாநில குடிவரவுத் துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் தரஸ் தெரிவித்தார்.

“இவர்களை கைது செய்ததன் மூலம் சட்டபூர்வ அனுமதியின்றி வெளிநாட்டுத் தொழிலாளர்களை தருவிப்பது, அவர்களை வேலையில் அமர்த்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்த ஒரு கும்பலை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக” அவர் மேலும் சொன்னார்.

“பொதுமக்கள் அளித்த புகாரை த் தொடர்ந்து ஆறு மாத கால உளவுத்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் இந்த சோதனை மேற்கொண்டதில் , மூவரும் கைதுசெய்யப்பட்டதாக” அவர் இன்று (ஜூலை 8) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த நிறுவனத்தின் செயல்பாட்டின் பின்னணியில் உள்ள முக்கிய சந்தேக நபர் 28 வயதுடையவர் என்றும் அவருக்கு இரண்டு மலேசிய மனைவிகள் இருப்பதாகவும் முகமட் ருஸ்டி கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட நிறுவனம், சந்தேக நபரின் இரண்டாவது மனைவி என்று கூறப்படும் மலேசிய பெண்ணின் பெயரைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

“நிறுவனம் முழுவதுமாக பிரதான சந்தேக நபரால் நிர்வகிக்கப்படுகிறது, அதே நேரத்தில் மற்ற இரண்டு பாகிஸ்தானிய பிரஜைகள் அவருக்கு கீழ் பணிபுரிவதாக ஒப்புக்கொண்டனர் மற்றும் தற்காலிக பணி வருகைக்கான அனுமதிச் சீட்டுகளைப் பெற RM7,000 செலுத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here