புதுடெல்லி: வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்த வினய் குவாத்ரா வரும் ஜூலை 14ஆம் தேதி ஓய்வு பெற்றார். அதையடுத்து அந்தப் பதவியில் விக்ரம் மிஸ்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
2019 முதல் 2021ஆம் ஆண்டு வரை சீனாவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றினார். எல்லை தொடர்பாக இந்தியா – சீனா பேச்சுவார்த்தையில் இவர் முக்கியப் பங்காற்றினார். புதிய வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்றுள்ள மிஸ்ராவுக்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.





















