கோலாலம்பூர்:
மலேசியத் தீபகற்பத்தின் வடக்கு எல்லைப் பகுதியில் பாதுகாப்பை மேம்படுத்த மேலும் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பேணுவது பாதுகாப்புப் படைகளின் தோள்களில் மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனும் அப்பொறுப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும் என, இன்று புத்ராஜெயாவில் நடந்த தேசிய பாதுகாப்பு மாதம் 2024 தொடக்க நிகழ்வில் உரையாற்றும்போது அவர் கூறினார்.





















