பாரிஸ் ஒலிம்பிக்கில்.. பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள 10 இந்தியர்கள்!

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடர், வரும் ஜூலை 26ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன், இத்தொடர் நிறைவு பெறும்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா மொத்தம் 16 விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளது. சுமர் 112 இந்திய வீரர், வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா ஈட்டு எறிதலில் தங்கம் வென்றுகொடுத்தார். மேலும் இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது.

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு, இந்தியா விளையாட்டு துறை மேலும் வலுபெற்றுள்ளது. இதனால், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா கூடுதல் பதக்கங்களை வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இத்தொடரில், இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள 10 வீரர்கள் குறித்து பார்க்கலாம்.

1.நீரஜ் சோப்ரா:
டோக்கியோ ஒலிம்பிக்கில் 85.97 மீட்டர் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார். அடுத்து, வேர்ல்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 88.77 மீட்டர் எறிந்து தங்கம் வென்றார். இதே பார்மில், டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு சென்றால், தங்கம் வெல்வது உறுதி எனக் கருதப்படுகிறது.

2.நீகத் ஜரீன்:
குத்துச் சண்டை வீராங்கனை நீகத் ஜரீன், இரு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர். சமீபத்தில், லோர்தா கோப்பையில் முதலிடம் பிடித்து அசத்தினார். தற்போது ஜெர்மனியில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இவரும் தங்கம் வெல்ல வாய்ப்புள்ளது.

3.மீராமாய் சானு:
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவர். உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரில், மூன்றாவது இடத்தை பிடித்து, பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார். இவர் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.

பிவி சிந்து:
பாட்மிண்டன் தரவரிசையில், முதல் 16 இடங்களை பிடிப்பவர்கள் நேரடியாக பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றனர். பிவி சிந்து 12ஆவது இடத்தை பிடித்து, தகுதிபெற்றுள்ளார். கடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். தற்போதும் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.

மேலும், துப்பாக்கி சுடுதலில் சிபத் கவுர் சம்ரா, குத்துச் சண்டையில் லோவ்லினா போர்கோஹைன், கோல்ப் விளையாட்டில் அதிதி அசோக், ஆடவர் ஹாக்கி அணி, பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாட்விக், ஷிராக் ஆகியோரும் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here