சனிக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்து பிரிமியர் லீக் ஆட்டத்தில் லிவர்புல் 3-1 என்ற கோல் கணக்கில் பர்ன்லி அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் லிவர்புல் அணி அரங்கில் நடைபெற்றது.
அதில் லிவர்புல் அணிக்கான முதல் கோலை ஆட்டத்தின் 31ஆவது நிமிடத்தில் டியேகோ ஜோத்தா புகுத்தினார். ஆனாலும் முதல் பாதி நேரம்முடிவடையும் தறுவாயில் பர்ன்லி அணியினர் கோல்புகுத்தி ஆட்டத்தை சமப்படுத்தினர்.
இருப்பினும் 52ஆவது நிமிடத்தில் லூயிஸ் டியாஸ், 79 ஆவது நிமிடத்தில் நுனேஸ் ஆகியோர் கோல்கள் புகுத்தி லிவர் புல் அணியின் வெற்றியை உறுதி .செய்தனர். லிவர்புல் அணி இத்தவணையில் இதுவரை 24 ஆட்டங்களில் களம் இறங்கியுள்ளது.
அதில் அவ்வணி 16 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆறில் சமநிலை கண்டு இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. தற்போது லிவர்புல் அணி பிரிமியர் லீக் பட்டியலில் 54 புள்ளிகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.