யங்கோன்: சீனா- மியன்மார் எல்லையில் அமைதி, நிலைத்தன்மை நீடிக்க இருநாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசியுள்ளனர். சீனா சார்பில் சிறப்பு தூதர் டெங் சிஜுனும் மியன்மார் சார்பில் அந்நாட்டு ராணுவத் தலைவர் மின் அங் லெங்கும் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
மியன்மார் ராணுவத்திற்கு மிகவும் நெருக்கமாக உள்ள நாடு சீனா. மியன்மாருக்கு ஆயுதங்கள் வழங்குவதிலும் சீனா முன்னணி வகிக்கிறது. மியன்மார் உள்ளூர் கிளர்ச்சியார்களிடமும் சீனா நெருக்கமாக உள்ளது. எல்லையில் உள்ள சில முக்கிய இடங்களை கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சீனா அவ்வாறு செய்வதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். கடந்த வாரம் மியன்மார் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் 150,000க்கும் அதிகமான மக்கள் வாழும் லாசியோ நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.





















