கடலில் சேதமடைந்த மரப்படகு; 8 நாட்களாக கடலில் தவித்த 30 சட்டவிரோத குடியேறிகள் கைது

கோலாலம்பூர்:

தஞ்சோங் ஹன்டு, செகாரியில் இருந்து 9.8 கடல் மைல் தொலைவில், மொத்தம் 30 இந்தோனேசிய சட்டவிரோத குடியேறிகள் (PATI) பயணித்த மரப்படகு சேதமடைந்ததன் காரணாமாக, சுமார் எட்டு நாட்கள் கடலில் தத்தளித்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 8.34 மணியளவில், மஞ்சுங் காவல்துறை தலைமையகத்திற்கு (IPD) சித்தியவானின் கம்போங் அச்சே மரைன் போலீஸ் குழுவிடம் இருந்து குறித்த மரப் படகு தடுத்து வைக்கப்பட்டது குறித்து தகவல் கிடைத்தது என்று மஞ்சுங் மாவட்ட காவல்துறைத் தலைவர், ஏசிபி முஹமட் நோர்டின் அப்துல்லா கூறினார்.

“போம்-போம் வகை மரப் படகு இந்தோனேசியாவில் இருந்து பதிவு செய்யப்படாத வழித்தடத்தில் வெளிநாட்டினரை ஏற்றிச் சென்றதாக நம்பப்படுகிறது. அந்தப்படகை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி, கடல்சார் போலீசார் சோதனை நடத்தி, மலேசியாவுக்குள் அனுமதியின்றி நுழைந்த சந்தேகத்தின் பேரில் படகு ஓட்டுநர் உட்பட 24 இந்தோனேசிய ஆண்கள் மற்றும் ஐந்து பெண்களை கைது செய்தனர்.

“கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காக IPD மஞ்சுங் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்,” என்று அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here