தவறுதலாக பாக். எல்லைக்குள் நுழைந்த இந்திய ராணுவத்தின் ட்ரோன்

ஸ்ரீநகர்: இந்திய எல்லையில், வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ட்ரோன் (mini UAV) ஒன்று, தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்திருக்கிறது. தொழில் நுட்ப கோளாரால் இது நடந்திருப்பதாகவும், ட்ரோனை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல்லை கண்காணிப்பு பணியில் நவீன தொழில்நுட்பங்கள் முழு வீச்சில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், ஊடுருவல்கள், அத்துமீறல்கள், ஆக்கிரமிப்பு முயற்சி உள்ளிடடவை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருக்கின்றன. எனுவே, பாதுகாப்பு பணிகளில் நவீன தொழில்நுட்பத்தின் தேவைகள் இன்றியமையாததாக மாறியுள்ளன. குறிப்பாக ட்ரோன்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன.

இப்படி இருக்கையில் இன்று காலை சுமார் 9.30 மணியளவில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ட்ரோன் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அது பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்துள்ளதாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை பாகிஸ்தான் ராணுவம் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மறுபுறம் இந்திய ராணுவம் தரப்பில், ட்ரோனை திரும்பப் பெரும் முயற்சிகள் நடந்துக்கொண்டிருக்கிறது. விரைவில் இது தொடர்பாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்துடன், ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் (டிஜிஎம்ஓ) மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லை பகுதியில் இதுபோன்ற சலசலப்புகள் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த புதன்கிழமை இதேபோன்ற பஞ்சாயத்து ஒன்று வெடித்தது. அதாவது இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று, ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரான் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக குண்டு ஒன்று பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் விழுந்தது. இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

ஆனால், குண்டு விழுந்த இடம் வெட்ட வெளி என்பதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து இன்று இரண்டாவது சம்பவம் நடந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here