சம்பளம் வாங்காமல் விவசாய பண்ணையில் வேலை பார்க்கும் மோகன்லால் மகன்

மலையாள திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் மோகன்லால், திரைப்பட தயாரிப்பாளரான கே.பாலாஜியின் மகளான சுசித்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு விஸ்மயா மோகன்லால் என்ற மகளும் பிரணவ் மோகன்லால் என்ற மகனும் உள்ளனர்.FTQ வித் ரேகா மேனன் என்ற மலையாள யூடியூப் நிகழ்ச்சிக்கு சுசித்ரா மோகன்லால் பேட்டி கொடுத்துள்ளார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், அப்பு (பிரணவ்) இப்போது ஸ்பெயினில் ஒரு விவசாய பண்ணையில் வேலை செய்கிறார். தங்குமிடம் மற்றும் உணவுக்காக சம்பவம் எதுவும் வாங்காமல் அவர் வேலை செய்து வருகிறார். அவர் அங்கிருந்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் அந்த அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து கொள்வார்.

எனக்கு சினிமா பட ஸ்கிரிப்ட்களைக் கேட்பது பிடிக்கும், அதனால் நான் உட்கார்ந்து கேட்கிறேன். அவர் இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் நடிக்கிறார். வருடத்திற்கு குறைந்தது 2 படங்களாவது நடிக்குமாறு நான் அவரிடம் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அவர் சினிமா வாழ்க்கை என அனைத்தையும் பேலன்ஸ் செய்ய நினைக்கிறார்.அதே சமயம் அவரது அப்பாவுடன் அப்பு சேர்ந்து நடிப்பதை நான் விரும்பவில்லை. இருவரையும் ரசிகர்கள் ஒப்பிட்டு பார்ப்பது தனக்கு பிடிக்காது” என்று தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு வெளியான ஹிருதயம் திரைப்படத்தின் மூலம் பிரணவ் மலையாள ரசிகர்களிடையே புகழ்பெற்றார். இந்த ஆண்டு ஏப்ரலில் வெளியான வர்ஷங்கல்க்கு ஷேஷம் என்ற மலையாளப் படத்தில் அவர் கடைசியாக நடித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here