ஈப்போ:
மஞ்சுங் அருகே அயிர் தாவாரில் உள்ள செம்பனை தோட்டத்தில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் 47 வயது ஆணும் அவரது 17 வயது பெண் தோழியும் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் RM60,000 க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இரண்டு சந்தேக நபர்களும் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) நள்ளிரவு 12.10 மணியளவில் கைது செய்யப்பட்டதாக மஞ்சுங் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
மேலும் குறித்த சந்தேக நபர் எடுத்துச் சென்ற ஒரு பையில், 450.9 கிராம் எடையுள்ள ஹெரோயின் இருப்பதாக நம்பப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டையும், 103.5 கிராம் எடையுள்ள ஐந்து மெத்தாம்பெட்டமைன் பாக்கெட்டுகளையும் போலீசார் கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.
“சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மஞ்சுங் போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்,” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் அவர்களிடமிருந்து ஒரு கார், ஒரு ஸ்கூட்டர் மற்றும் RM200 ரொக்கம் ஆகியவை வீட்டில் கைப்பற்றப்பட்டன,” என்று அவர் இன்று (டிசம்பர் 8) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
இரண்டு சந்தேக நபர்களின் ஆரம்ப சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் மெத்தம்பேட்டமைன் பாவித்திருப்பது கண்டறிந்ததாக ACP ஹஸ்புல்லா கூறினார்.
ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 பிரிவு 39பி மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 15(1) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. மேலும் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இன்று முதல் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சொன்னார்.





















