சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி இன்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ரன்களை கடந்த விராட் கோலி புதிய உலக சாதனையை ஏற்படுத்தி உள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்கள் எடுத்தது.

இதை அடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக சுப்மன் கில் மற்றும் விராட் கோலி, விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இணை சிறந்த பார்ட்னர்ஷிப்பை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here