புத்ராஜெயா:
இன்று காலை புத்ராஜெயா சுங்கச்சாவடி அருகே கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பு சுவரில் மோதியதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து காலை 7.42 மணிக்கு துறைக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) அமாட் முகிலிஸ் முக்தார் கூறினார்.
உடனே “சைபர்ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர், அங்கு காலை 8.00 மணிக்கு அவர்கள் வந்தபோது, பெரோடுவா மைவி விபத்துக்குள்ளாகியிருந்தது என்றும், அதனை ஓட்டிவந்த 40 வயதுடைய ஓட்டுநர் அவரது இருக்கையில் சிக்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரை மீட்க தீயணைப்பு வீரர்கள் மிட்டதாகவும், ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அங்கிருந்த சுகாதார அமைச்சக ஊழியர்கள் உறுதிப்படுத்தினர் என்று அவர் மேலும் கூறினார்.