மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் அதிரடி கைது

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

2016-22 காலகட்டத்தில் பிலிப்பைன்ஸ் அதிபராக இருந்த ரோட்ரிகோ டுட்டெர்டே, நாட்டில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோரை கொன்று மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து ரோட்ரிகோ டுட்டெர்டே, மணிலாவின் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து  (செவ்வாய்க்கிழமை) பிலிப்பைன்ஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here