பத்திரிகையில் பிறையின்றி தேசியக்கொடி வெளியிட்டது – ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் மாமன்னர்

கோலாலம்பூர்:

பிரபல உள்ளூர் சீன செய்தித்தாள் அதன் முதல் பக்கத்தில் பிறை இல்லாத மலேசியை தேசியக் கொடியை அதாவது ஜாலூர் ஜெமிலாங்கை வெளியிட்ட தவறை ஏற்றுக்கொள்ள முடியாது என மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தேசியக்கொடி வெறும் படங்களால் அலங்கரிக்கப்பட்ட துணி என்பதைத் தாண்டி, அது வரலாற்றுப் போராட்டம், பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகம், தேச பக்தி மற்றும் சுதந்திரத்தின் அடையாளம் என்று அவர் மேலும் கூறினார்.

அத்தோடு தேசியக்கொடி நாட்டின் இறையாண்மை மற்றும் நமது அடையாலத்தின் சின்னம், அதனை முழுமையின்றி பத்திரிகையில் காண்பிப்பது மக்களிற்கு கோபத்தினை தூண்டக்கூடும் என்றும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மாமன்னர் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஓர் பதிவில் கூறினார்.

சீன அதிபர் ஜி ஜின்பெங்கின் மலேசிய வருகையை தொடர்ந்து மலேசிய – சீனக் கொடிகளை உள்ளடக்கிய படத்தை அந்த செய்தி தாள் வெளியிட்டது. ஆனால் பத்திரிகையில் வெளியிட்ட தேசியக் கொடியில் பிறை இல்லை.

இச்சம்பவம் குறித்து சின் சியூ செய்திதாள் நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளதுடன் இது வடிவமைப்பு செயல்பாட்டின்போது தற்செயலாக செய்யப்பட்ட பிழை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

அத்தோடு அதன் டிஜிட்டல் பதிப்பிலுள்ள குறித்த பதிவை திருத்தியும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here