மகாலட்சுமிக்கு பிடிக்காத விஷயங்கள்

இந்து சாஸ்திரங்களின்படி, சில செயல்களை சூரியன் மறைந்த பிறகு செய்யக்கூடாது. அப்படி செய்தால், லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகலாம். அதுமட்டுமில்லாமல், துரதிஷ்டம் வரலாம். இதனால் பலவிதமான துன்பங்களையும் நாம் சந்திக்க நேரிடும். இந்த செயல்கள் அசுப காரியங்களாக கருதப்படுவதால் இவைகள் எதிர்மறையான விஷயங்களை ஈர்த்து கெடுதல்களை தரும் என்பது நம்பிக்கை. மாலையில் சூரியன் மறைந்த பிறகு என்னென்ன செயல்களை செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

1. பாத்திரங்களை கழுவாமல் வைக்கக் கூடாது:
சமையலறை சுத்தமாக இருக்க வேண்டும். அது ரொம்ப முக்கியம். இரவு நேரத்தில் பாத்திரங்களை கழுவாமல் வைத்தால், தரித்திரம் வரும். கடன் தொல்லை வரும். பாத்திரங்களை கழுவி சுத்தமாக வைத்தால், லட்சுமி தேவியோட ஆசீர்வாதம் கிடைக்கும். சமையல் அறை சுத்தமாக இருந்தால், நல்ல சூழ்நிலை இருக்கும். அதிர்ஷ்டம் வரும். சமையல் அறை அழுக்காக இருந்தால், துரதிர்ஷ்டம் வரும். கிச்சனை சுத்தமா வச்சா, நல்ல நேரம் வரும். கடவுள் அருள் கிடைக்கும்.

2. முடி மற்றும் நகம் வெட்டக்கூடாது:

இந்து மதத்தில், இரவு நேரத்தில் முடி, நகம் வெட்டக்கூடாது. லட்சுமி தேவி மாலை நேரத்தில் வீட்டுக்கு வருவாள். அப்போது, முடி, நகம் வெட்டி போட்டால், அவரை அவமதிப்பது போல் ஆகும். அதனால், முடி, நகம் வெட்டுவதை பகலில் செய்தால் நல்லது. கெட்ட கர்மாவை தவிர்க்கலாம். தேவியை அவமதிக்காமல் இருக்கலாம்.

3. துணி துவைக்க கூடாது:

ராத்திரி நேரத்துல துணி துவைத்தால், கெட்ட சக்தி வரும். காலையில் அந்த துணியை போட்டால், அந்த கெட்ட சக்தி நம்முடைய உடம்பில் ஒட்டிக் கொள்ளும். அதனால, துணியை பகலில் மட்டுமே துவைக்க வேண்டும். சூரிய வெளிச்சத்தில் காய வைக்க வேண்டும். சூரிய வெளிச்சத்தில் இருக்கும் சக்தி, கெட்ட சக்தியை விரட்டும். கிருமிகளை அழிக்கும். துணியை சுத்தமாக்கும். சூரிய வெளிச்சம் நல்லது நடக்கும்னு நம்புறாங்க. அதுமட்டுமில்லாமல், ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

4. பெண்கள் ஈர முடியுடன் இருக்கக் கூடாது:

பெண்கள் மாலை நேரத்திற்கு அப்புறம் முடியை கட்டி வைக்க வேண்டும். அப்போது தான் கெட்ட சக்தியிலிருந்து தப்பிக்கலாம். முடியை விரிச்சு போட்டால், கெட்ட சக்தி நம்மை பிடிக்கும். முடியை கட்டுவது நம்மை தீமையில் இருந்து காப்பாற்றும். இரவு நேரத்தில் நம்முடைய சக்தி குறைந்து விடும். அதனால், முடியை கட்டி வைத்தல் நல்லது.

5. வெள்ளை நிற உணவுகளை தானம் செய்யக்கூடாது:

பால், தயிர், உப்பு, சர்க்கரை போன்ற வெள்ளை நிற பொருட்களை மாலை நேரத்தில் தானம் பண்ணக் கூடாது. அப்படி செய்தால், லட்சுமி தேவி கோபப்படுவாள். பண கஷ்டம் வரும். இந்த பொருட்கள் எல்லாம் லட்சுமி தேவியோட ஆசீர்வாதம். அதை தானம் செய்தால், நம்முடைய பொருளாதார நிலைமை கெடுக்கும். அதனால், இந்த மாதிரி தானம் பண்ணாமல் இருந்தால், அதிர்ஷ்டம் வரும். கடவுள் அருள் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here