கங்கார்:
பாடாங் பெசார் அருகே உள்ள தித்தி திங்கியில் நேற்று நடந்த நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற சுகாதார அமைச்சக ஆய்வக உதவியாளர் ஒருவர் உயிரிழந்தார்.
பெரோடுவா விவா காரை ஓட்டி வந்த பாதிக்கப்பட்ட அப்துல் ரஷீத் ஹாஷிம் (73) சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பாடாங் பெசார் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஷோக்ரி அப்துல்லா தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து மதியம் 1.15 மணிக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது என்றும் அவர் சொன்னார்.
கங்காரில் இருந்து பாடாங் பெசார் நோக்கிச் சென்ற வாகனம் எதிர் பாதையில் நுழைந்து, பெரோடுவா விவாவில் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும் இதில் பெரோடுவா ஆக்சியா மற்றும் பெரோடுவா மைவி ஆகிய இரண்டு கார்களும் விபத்தில் சிக்கின.
“இந்த மோதலின் காரணமாக பெரோடுவா விவா ஓட்டுநர் படுகாயமடைந்தார், மேலும் பலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன என்றும், இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது,” என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் உயிரிழந்தவரது சடலம் உடல் துவாங்கு ஃபௌசியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது, இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.