பிச்சைக்காரரை கொலை செய்ததாக நம்பப்படும் சந்தேக நபருக்கு ஏழு நாட்கள் தடுப்புக்காவல்

கோலாலம்பூர் :

ஷா ஆலமில் பிச்சை எடுக்கும் இடம் தொடர்பாக இருவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், பிச்சைக்காரனைக் கொலை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஏழு நாட்களுக்கு தடுப்புக்காவல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த ​​சந்தேக நபர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் மருத்துவமனையின் கண்காணிப்பு வார்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஷா ஆலம் OCPD துணை ஆணையர் முகமட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.

மேலும் ” அவர் மாற்றுத்திறனாளி அட்டை வைத்திருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது ” என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் உடலில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், “மார்பில் குத்தப்பட்ட காயம்” மரணத்திற்கான காரணம் உறுதிப்படுத்தப்பட்டது.

முன்னதாக நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 24), இங்குள்ள செக்சன் 18 இல் உள்ள ஒரு வங்கியின் முன் 40 வயது பிச்சைக்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். பிச்சை எடுக்கும் இடம் தொடர்பான சண்டையின் போது 28 வயது சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here