பூச்சோங்கில் காதலியின் முன்னாள் கணவர் மற்றும் அவரது கூட்டாளிகளால் ஆடவர் மீது தாக்குதல்

கோலாலம்பூர்:

பூச்சோங்கில் 47 வயது நபர் ஒருவர் தனது காதலியின் முன்னாள் கணவர் மற்றும் இரண்டு கூட்டாளிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவம் சனிக்கிழமை (மே 24) அதிகாலை 2.15 மணியளவில் தாமான் பூச்சோங் இந்தானில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்ததாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை துணை தலைவர் கண்காணிப்பாளர் முகமட் ஃபைரஸ் ஜாபர் கூறினார்.

“தனது காதலன் தனது வீட்டில் வைத்து தாக்கப்பட்டதாகக் கூறி ஒரு பெண்ணிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. பாதிக்கப்பட்ட ஆடவரும் அந்தப் பெண்ணும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் “குறித்த பெண்ணின் முன்னாள் கணவரும் 30 மற்றும் 40 வயதுடைய இரண்டு ஆண்களும் வீட்டிற்கு வந்து, கத்தி மற்றும் இரும்பு கம்பியைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரைத் தாக்கினர்,” என்று அவர் நேற்று (மே 24) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவரின் தலை மற்றும் உடலில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டன, மேலும் அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும், அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது என்றார்.

“இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் பொறாமை மற்றும் பெண்ணுக்கும் அவரது முன்னாள் மனைவிக்கும் இடையிலான தீர்க்கப்படாத வீட்டுப் பிரச்சினைகள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஆபத்தான ஆயுதங்களைக் கொண்டு தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது சவுக்கடி தண்டனை விதிக்க வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here