கோலாலம்பூர்:
கடந்த மே 13 அன்று நடந்த சாலை விபத்தில் இறந்த ஒன்பது FRU பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா RM5,000 நிதி உதவி வழங்குவதாக பேராக் மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.
முன்னதாக அரச மலேசிய கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் இதேபோன்ற உதவி வழங்கப்பட்டதாகவும், இந்த உதவி மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகவும் மந்திரி பெசார் சாரணி முகமட் கூறினார்.





















