மலேசியா- சிங்கப்பூர் இடையே போக்குவரத்து சேவை வழங்க Grab பரிந்துரை

ஜோகூர் பாரு:

மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே போக்குவரத்துச் சேவை வழங்குவது குறித்து Grab நிறுவனத்திடம் ஜோகூர் மாநில அரசாங்கம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான போக்குவரத்தை எளிமையாக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று ஜோகூர் மாநில மந்திரி பெசார் ஓன் ஹபிஸ் காஸி தெரிவித்தார்.

இது தொடர்பாக Grab நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரிகளை அண்மையில் சந்தித்துப் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போக்குவரத்தை எளிமையாக்கினால் ஜோகூரின் சுற்றுலாத்துறை கூடுதல் வளர்ச்சியடையும் என்று காஸி கூறினார்.

விசிட் ஜோகூர் 2026 (Visit Johor Year 2026) திட்டத்தை மேம்படுத்த இது உதவும் என்று நம்பப்படுகிறது.

மலேசியா மற்றும் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சுகளை உள்ளடக்கிய எல்லை தாண்டிய போக்குவரத்துத் திட்டம், இரு நாடுகளுக்கும் இடையிலான பயணத்தை எளிதாக்குவதில் கிராப் மற்றும் பிற பொதுப் போக்குவரத்து அமைப்புகளின் பங்குகள் ஆகியவை குறித்து அண்மையில் நடந்த சந்திப்பில் பேசப்பட்டது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here