PTPTN கடன் மறுசீரமைப்பு : கடன் பெற்றவர்கள் அவர்களின் வசதிக்கேற்ப பணம் செலுத்த உதவுகிறது -தர்ஷினி நன்றி கூறுகிறார்

(பி.ஆர்.ராஜன், பிரகாஷ் வேலு)

PTPTN கடன் மறுசீரமைப்புத் திட்டம் (PTPTN Loan Restructuring Initiative) கடன் பெற்றவர்கள் அவர்களின் நிதி வசதிக்கேற்ப PTPTN கடனைத் திருப்பிச் செலுத்த உதவவும், மேலும் தளர்வான கட்டண முறைகளை வழங்கவும் இலக்கு வைத்துள்ளது.

இந்த மறுசீரமைப்பு மூலம், கடன் வாங்குபவர்கள் மாதாந்திரத் தவணைத் தொகையைக் குறைத்து, கடன் காலத்தை நீட்டித்து, தங்களுக்கு மிகவும் பொருத்தமான மாதாந்திரத் தவணைத் தொகையை மீண்டும் நிர்ணயிக்கலாம்.

இந்த தளர்வான கடன் திருப்பிச் செலுத்தும் அணுகுமுறையின் மூலம், கடன் வாங்கும் ஒவ்வொருவரும் சுமை இல்லாமல் அதனைச் திருப்பிச் செலுத்தும் பொறுப்பை நிறைவேற்றுவதை PTPTN உறுதி செய்கிறது.

இது நாட்டின் உயர்கல்வி நிதி தொடர்வதை உறுதி செய்கிறது.
மேலும் முக்கியமாக, தற்போதுள்ள நிலுவைகள் மீண்டும் பூஜ்ஜியமாகின்றன. கடன் வாங்குபவர் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இதன் மூலம், முந்தைய ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கை, கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் மறைமுகமாக கடன் வாங்குபவருக்கு உதவுகிறது.

தர்ஷினி த/பெ சுப்ரமணியன் (வயது 35) சைபர்ஜெயாவில் வசிக்கிறார். PTPTN கடன் பெற்றிருப்பவர்களில் ஒருவர். அவர் 2008ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப துறையில் தனது டிப்ளோமோ படிப்பை முடித்தார்.

தர்ஷினி தனது PTPTN கடனை மறுசீரமைத்த தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் தனது கல்விச் செலவான 25,000 ரிங்கிட்டில் 10 விழுக்காடு சொந்தப் பணத்தையும், மீதமுள்ள 90 விழுக்காட்டிற்கு PTPTN கடன் பெற்றார். இந்தச் சேவை, நிதி நெருக்கடி இல்லாமல் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த அவருக்கு உதவியது. மேலும் ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான வழியையும் திறந்தது.

“படிப்பு முடிந்த பிறகு, எனக்கு உடனடியாக வேலை கிடைக்கவில்லை. எனவே, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நேரத்தில், என்னால் பணம் செலுத்த முடியவில்லை. வேலை கிடைத்த பிறகும், எனது வருமானம் மிகக் குறைவாக இருந்ததால், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் நான் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டேன்.” அதே நேரத்தில், எனது தந்தை காலமானார் என்று அவர் குறிப்பிட்டார்.

குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அவரது தோள்களில் விழுந்தது. இதனால், அவர் PTPTN கல்வி கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பல தடைகளை எதிர்கொண்டார். “இந்த சூழ்நிலையில், நான் PTPTN கடனை மறுசீரமைக்க விண்ணப்பித்தேன்.” முழு செயல்முறையும் எந்த சிரமமும் இல்லாமல் அல்லது மீண்டும் மீண்டும் அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய தேவையும் இல்லாமல், இணையம் வழியாகவே கையாளப்பட்டது.

PTPTN அதிகாரிகள் பி.டி.பி.டி.என். கடன் மறுசீரமைப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்பாடு செய்வதில் எனக்கு மிகவும் உதவியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தனர். “எனது நிதி நிலைமைக்கு சுமையாக இருக்காத மாதாந்திரத் தவணைத் தொகை குறித்த எனது பரிந்துரையை பி.டி.பி.டி.என். ஏற்றுக்கொண்டது.

PTPTN கடனின் மறுசீரமைப்பு எனக்கு மிகவும் உதவியது.”PTPTN  கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் பி.டி.பி.டி.என். கடன் பெற்றவர்கள் இந்த மறுசீரமைப்பு மூலம் எளிதான தீர்வைக் காணலாம் என்றும் தர்ஷினி கூறினார்.

கடன் வாங்குபவர்கள் உதவி மேலும் விளக்கங்களைப் பெற PTPTN .-ஐ தொடர்பு கொண்டால் போதும். முறையான விளக்கங்கள் தரப்படும். அதே போல் வழியும் காட்டப்படும்.

என்னைப் பொருத்தவரை எனது வசதிக்கேற்ப ஒவ்வொரு மாதமும் திருப்பிச் செலுத்தும் தொகையை முன்மொழிந்தேன். PTPTN அதனை ஏற்றுக்கொண்டு, பொருத்தமான கட்டண முறையை வழங்கியது.

இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறேன்.

நிதிச் சிக்கல்களை எதிர்கொள்ளும் மற்ற கடன் பெற்றவர்களுக்கு அவர் ஓர் ஆலோசனையாகப் பின்வருமாறு கூறினார்:

“PTPTN -ஐத் தொடர்பு கொண்டு அதிகாரிகளுடன் பேசுங்கள். அவர்கள் சரியான வழிகாட்டுதலை வழங்குவார்கள். சிக்கலை இணையம் வழியாக எளிதாகத் தீர்க்க முடியும். அனைவருக்கும் பிரச்சினைகள் இருக்கும், ஆனால் கல்வி நோக்கங்களுக்காக நாம் எடுத்த PTPTN கடனைத் திருப்பிச் செலுத்துவது நல்லது. கடன்பாரத்துடன் என்றென்றும் வாழாதீர்கள்.”

அவர் மேலும் கூறுகையில், “PTPTN எனது எதிர்காலத்தை இவ்வளவு அழகாக வடிவமைக்க உதவியதற்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.”
மறுசீரமைப்பு விண்ணப்பம் குறித்த ஆலோசனை, மேலும் எளிதான, விரைவான, பாதுகாப்பான தகவல்களுக்கு myPTPTN செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள் என்று தர்ஷினி ஆலோசனை நல்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here