ஜோகூர் மாநிலக் கொடியைத் தலைகீழாகப் பறக்க விட்ட மினி மார்க்கெட்: 30 நாட்கள் மூட உத்தரவு!

கோலாலம்பூர்:

பெக்கான் நானாஸில் (Pekan Nanas) உள்ள ஒரு மினி மார்க்கெட், ஜோகூர் மாநிலக் கொடியைத் தலைகீழாகப் பறக்கவிட்டதால், பொன்தியான் நகராட்சி மன்றம் (MPPn), அதனை 30 நாட்களுக்கு மூட உத்தரவிட்டுள்ளது.

இந்தச் செயல், மெர்டேகா (Merdeka) தினத்தை நெருங்கி வரும் நிலையில், பொதுமக்களிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

2019-ஆம் ஆண்டு வணிகம், வர்த்தக உரிமச் சட்டத்தின் (Business and Trade Licensing By-Laws 2019) கீழ், இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வந்தது என்று நகராட்சி மன்றத் தலைவர் அப்துல் அசிம் சம்சுடின் (Abdul Azim Shamsuddin) தெரிவித்தார்.

இருப்பினும், கடை உரிமையாளர் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

இறையாண்மையின் அடையாளங்களாக உள்ள தேசிய, மாநிலக் கொடிகள் சரியாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அத்துடன், வெளிநாட்டுப் பணியாளர்களிடம் இந்த வேலையை ஒப்படைக்கக் கூடாது என்றும், வணிக உரிமையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, இந்தச் சம்பவம், வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்றும் அலட்சியத்தால் நடந்தது என்றும் நம்பப்படுகிறது.

எனவே தான், இந்தச் சம்பவம் குறித்து, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. சமீபத்தில், பொன்தியான், மலாக்கா, பினாங்கு போன்ற இடங்களில், ஜாலுர் கெமிலாங் (Jalur Gemilang) கொடியும் தலைகீழாகப் பறக்கவிடப்பட்ட சம்பவங்கள் பதிவாகி இருந்தன.

இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்க, பெக்கான் நானாஸ் சட்டமன்ற உறுப்பினர் தான் எங் மெங் (Tan Eng Meng) வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here