47வது ஆசியான் மாநாட்டில் அமெரிக்கா மற்றும் ரஷ்ய அதிபர்கள் கலந்துகொள்வதாக பிரதமர் அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர்:

அடுத்த மாதம் நடைபெறும் 47வது ஆசியான் மாநாட்டில் அமெரிக்கா அதிபர் டோனால்ட் டிரம்ப் மலேசியாவுக்கு வருவதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் உறுதிப்படுத்தியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற அம்பேங்க் குழுமத்தின் 50ஆவது பொன்விழா இரவு விருந்தில், சீனப் பிரதமர் லி கியாங்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதை குறிப்பிட்டார். மேலும், அதிபர் டிரம்ப் கூட கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தார்.

“அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் 47வது ஆசியான் மாநாட்டுடன் இணைந்து மலேசியாவுக்கு வரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்,” என அவர் கூறினார்.

மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் மலேசியாவுக்கு வருவதை பரிசீலித்து வருவதாக அன்வார் தெரிவித்தார். இது, சமீபத்தில் பெய்ஜிங்கில் நடந்த இரு தலைவர்களின் சந்திப்பின் பின்னர் தெரிவிக்கப்பட்டது.

“அதிபர் புட்டின் பெய்ஜிங்கில் என்னைச் சந்தித்து, மலேசியாவுக்கு வருவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாகக் கூறினார்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், உலகத் தலைவர்களின் வருகை மலேசியாவின் புவிசார் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை காட்டுவதாக அன்வார் வலியுறுத்தினார்.

“சோதனைகள் மிகுந்த காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆனாலும், நமது நாட்டின் மீள்திறனைப் பார்த்து நான் நம்பிக்கையாக இருக்கிறேன்,” என்று அவர் கூறி, உள்நாட்டு நிலைத்தன்மை, அரசியல் உறுதி மற்றும் பொருளியல் தெளிவு ஆகியவற்றை வலியுறுத்தினார், இது முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு ஆதாரமாக இருக்கும்.

அன்வார், பொருளியல் வளர்ச்சியை வழிநடத்தக்கூடிய கொள்கைகள், குறிப்பாக பகுதி மின்கடத்தி, எரிசக்தி உருமாற்றம், மின்னிலக்கம் போன்ற துறைகளில் கவனம் செலுத்தப்படுவதாக கூறினார்.

அவரது கடைசி உரையில், மலேசியாவின் அமைதி, நிலைத்தன்மை, பொருளியல் மற்றும் கலாசாரத் துடிப்பு நாட்டை உறுதியான மற்றும் நம்பகமான பங்காளியாக வைக்கும் என்பதை வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here