கோலாலம்பூர்:
செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 17 வரை, தீபகற்ப மலேசியாவில் RON97 பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலை இரண்டு சென்ட்கள் உயரும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், RON97 இன் சில்லறை விலை லிட்டருக்கு RM3.18 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு RM2.90 ஆகவும் இருக்கும்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, “திபகற்ப மலேசியாவில் டீசல் சில்லறை விலை கடந்த ஆண்டு ஜூன் 10 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட போது இருந்த விலையுடன் ஒப்பிடும்போது இன்னும் குறைவாக உள்ளது; அப்போது லிட்டருக்கு RM3.35 ஆக இருந்தது” குறிப்பிடத்தக்கது.
மேலும், RON95 இன் சில்லறை விலை லிட்டருக்கு RM2.05 ஆகவே உள்ளது. சபா, சரவாக் மற்றும் லாபுவானில், டீசல் விலை லிட்டருக்கு RM2.15 ஆக இருக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.





















