கருப்புச் சந்தைக்கு சென்றபோது காவல்துறையால் மீட்கப்பட்ட புலியின் மதிப்பு RM300,000

பெட்டாலிங் ஜெயா

ஜோகூர், மெர்சிங் அருகே உள்ள பெல்டா தெங்கரோஹ் பகுதியில் நேற்று காவல்துறை ஒரு காரில் புலியின் உடலை மீட்டனர். இந்த புலியின் உடல் கருப்பு சந்தையில் RM250,000 – RM300,000 மதிப்புடையதாக இருக்கலாம் என்று வனவிலங்குகள் மற்றும் தேசிய பூங்காக்கள் துறை இயக்குனர் அப்துல் காதிர் அபு ஹாஷிம் தெரிவித்தார்.

புலியின் ஒவ்வொரு உடல் பகுதிக்கும் கருப்பு சந்தையில் தனித்தானான மதிப்பு உள்ளது, மேலும் இந்த சம்பவம் ஒரு வனவிலங்கு கடத்தல் சங்கத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். நாங்கள் காவல்துறையுடன் இணைந்து இந்த கடத்தல் குழுவின் வலைப்பிணைப்பை கண்டறிய முயற்சித்து வருகிறோம் என்றார் அவர்..

அவருடைய கூற்றுப்படி, மலேசியப் புலிகள் தற்போது வெறும் எட்டு மாநிலங்களில் மட்டுமே காடுகள் மற்றும் பாதுகாப்பு பகுதிகளில் வாழ்கின்றன: பேராக், பஹாங்க், ஜோகூர், கிளந்தான், திரெங்கானு, கெடா, செலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான். இது புலிகளின் இயற்கை வாழ்விடங்கள் குறைந்துவருவதை வெளிப்படுத்துகிறது.

காவல்துறை விசாரணையில், புலியின் தலையில் ஆறு துப்பாக்கி குண்டு , வெட்டுகள், மற்றும் பல கடுமையான காயங்களைக் கொண்டுள்ளது, மேலும், அதை ஒரு வலைப்பூட்டு கம்பி போன்ற நெருக்கமான ஆபத்தான கருவிகளை கையாண்டதால் சில காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார் அவர். இந்த சம்பவத்தில் 8–49 வயதுக்குட்பட்ட 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here