கோலாலம்பூர்:
ஜூலை 18 அன்று நடைபெற்ற தடவல் சம்பவத்தில் தொடர்புடையதாகத் தண்டனைக் குழு விசாரணை முடிவடைத்த பிறகு, மெலக்காவில் உள்ள மாக்தாப் ரென்தாஹ் சயின்ஸ் மாரா (MRSM) பள்ளியில் இருந்து ஆறு மாணவர்கள் உடனடியாக நீக்கப்பட்டனர்.
விசாரணையில், இந்த சம்பவத்துடன் மாணவர்களின் தொடர்பு உறுதிசெய்யப்பட்டதால் இந்த நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது மற்றவர்களுக்கு பாடமாக செயல்பட வேண்டும் என்பதற்காக இனி இது தொடர்பின் எந்த தயவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் மஜ்லிஸ் அமானா ராக்யாட் (மாரா) தலைவரான அசிராஃப் வாஜ்தி துசுக்கி கூறியுள்ளார்.
“எந்த காரணத்திற்காகவும் பகடிவதை செய்வதை மாரா பொறுத்துக்கொள்ளாது. எந்தவொரு தரப்பினரும் இதை நியாயப்படுத்தவும் கூடாது, ஒருவர் பகடிவதை செய்தால் அவர் வெளியே போக வேண்டும்,” என்று அசிராஃப் கூறினார்.
ஜூலை 19 முதல் சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் குறித்து பல செய்திகள் வந்ததையும், உடனடியாக மாரா நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டதையும் அவர் நினைவு படுத்தினார்.



















