மருதம்’ படத்தில் கிராமத்து தாயாக ரக்‌ஷனா – “நல்ல கதாபாத்திரமெனில் எந்த சவாலையும் ஏற்கிறேன்”

‘மார்கழி திங்கள்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ரக்‌ஷனா, தற்போது வெளியான ‘மருதம்’ படத்தில் கிராமத்து பெண்ணாகவும், ஒரு குழந்தைக்குத் தாயாகவும் நடித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜாவை முதல் முறையாக சந்தித்தபோது, “சிறந்த நடிகையாக வர வேண்டும்” என வாழ்த்தியதோடு, ‘ரக்‌ஷனா’ என்ற பெயரையும் அவர் சூட்டியதாக நடிகை நினைவுகூர்கிறார்.

“பாரதிராஜா சார் பெயரிட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் சாதித்துள்ளனர். அந்த வரிசையில் நானும் இடம்பிடித்திருப்பது அதிர்ஷ்டம்,” என்கிறார்.

இளம் வயதிலேயே தாய்க் கதாபாத்திரம் ஏற்கும் நிலையில் விமர்சனங்கள் எழும் போது, அவர் பதிலளிப்பது ஒன்றே:
“கதைக்குத் தேவைப்பட்டதால் நடித்தேன். காக்கா முட்டை படத்திலும் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்திருந்தேன். கதாபாத்திரம் நன்றாக இருந்தால் அதுவே போதும்.”

கதையை கேட்டவுடன் மனதில் ஏற்படும் உணர்வு தான் தன் முடிவை தீர்மானிக்கும் என அவர் கூறுகிறார்:
“கதையும் கதாபாத்திரமும் நம்பிக்கையளித்தால் உடனே ஏற்கிறேன். யார் ஜோடியாக நடிக்கிறார்கள், வேறு அம்சங்கள் என்ன என்பதை அதிகம் யோசிப்பதில்லை.”

தமிழ் தவிர, மலையாளத் திரையுலகிலும் பெயர் வாங்க வேண்டும் என்பதே ரக்‌ஷனாவின் கனவு. சமீபத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ‘லோகா’ படத்தை பார்த்த பிறகு, அவர் கல்யாணியின் தீவிர ரசிகையாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

“அவரது இயல்பான நடிப்பும், நாயகியாக சுமந்த பொறுப்பும் என்னை ஈர்த்துவிட்டது. அப்படிப்பட்ட கதாபாத்திரம் கிடைத்தால், ஒரு ரூபாய்கூட வாங்காமல் நடித்துவிடுவேன்,” என்கிறார் ரக்‌ஷனா, எதிர்காலம் குறித்து கனவுடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here