மித்ரா தலைமை நெருக்கடி: பிரதமர் அன்வாரின் உத்தரவின் பேரில் மீண்டும் தலைமை ஏற்க உள்ளதாக ராமனன் அறிவிப்பு – அமைப்பின் எதிர்காலத் திசை குறித்து நிச்சயமற்ற நிலை

புத்ராஜெயா, அக்டோபர் 16 –

மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவு (Mitra) தற்போது ஒரு தலைமைத்துவ நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத் துறையிலன் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ராமனன், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிவுறுத்தலின் பேரில், மீண்டும் மித்ரா தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

ராமனன் இதற்கு முன்னர் 2023-ஆம் ஆண்டில் மித்ராவின் சிறப்புப் பணிக்குழுவின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் ஆவார்.

இதனிடையே இந்த மறு நியமனம் அதிகாரப்பூர்வமானது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இருப்பினும், மித்ராவின் தலைமை குறித்து ஏற்பட்டுள்ள தெளிவின்மை மற்றும் போட்டிக் கூற்றுக்களுக்கு மத்தியில், இந்த அமைப்பின் எதிர்காலத் திசை மற்றும் செயல்பாடுகள் இப்போது சமநிலையில் உள்ளன.

இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டுக்காக மித்ராவின் பொறுப்புகள் தடையில்லாமல் தொடர, தலைமைப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here