டிஜிட்டல் மோசடிகளை தடுக்க கடுமையான சிம் கார்டு விதிகள் – 2 எண்களுக்கு மட்டுமே அனுமதி!

கோலாலம்பூர்:

மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC), ப்ரீபெய்ட் சிம் கார்டு பதிவுக்கான புதிய மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களை அமல்படுத்த முன்மொழிந்துள்ளது.

புதிய விதிகளின்படி, மலேசிய குடிமக்கள் ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனத்திலும் (telco) அதிகபட்சம் இரண்டு ப்ரீபெய்ட் எண்கள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதே சமயம், வெளிநாட்டவர்களுக்கு மொத்தமாக இரண்டு எண்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

துணைத் தொடர்பு அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்ததாவது, இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் மோசடிகள், போலிக் கணக்குகள் உருவாக்கம், மற்றும் பிற டிஜிட்டல் அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவதாகும். “சிம் கார்டுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குற்றச்செயல்களுக்கு வழிவகுக்கிறது; இதைத் தடுக்க கட்டுப்பாடுகள் அவசியம்,” என்றார் அவர்.

இந்த முன்மொழிவு குறித்த பொதுமக்களின் கருத்து ஆலோசனை நவம்பர் மாதத்தில் நிறைவடையும், மேலும் புதிய விதிமுறை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கம், இந்த நடவடிக்கையின் மூலம் டிஜிட்டல் வசதி மற்றும் தகவல் பாதுகாப்பு ஆகிய இரண்டுக்கும் இடையே சமநிலையை உறுதிப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here