
தவாவ்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திங்கள்கிழமை (நவம்பர் 10) காலை தனது வேலை நிமித்தமான தவாவ் பயணத்தின் போது மூன்று நிகழ்ச்சிகளை தொடக்கி வைத்தார். காலை 9.30 மணிக்கு தவாவ் மருத்துவமனையின் புதிய கட்டடத் தொடக்க விழாவுடன் பிரதமரின் நிகழ்ச்சி தொடங்கியது.
பின்னர் அன்வார் காலை 11.15 மணியளவில் பசார் செமரக்கில் உள்ளூர் சமூகத்தினருடன் நடைப்பயணம் மற்றும் சந்திப்பு அமர்வுக்காக சிறிது நேரம் செலவிடுவார். தவாவில் அவரது இறுதி நிகழ்ச்சித் திட்டத்தில் அவர் காலை 11.35 மணிக்குத் தொடங்கவுள்ள தாமான் செமரக்கில் ‘Jelajah Malaysia’ நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.



















