மந்திரங்களை 108 முறை ஜபிக்கும் காரணம்

இந்து மதத்தின் மீது தீவிர பக்தி கொண்டவர்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு கடவுள் மந்திரத்தை கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். காயத்ரி மந்திரமோ அல்லது ஒரு எளிய ‘ஓம் நம சிவாயே’ என்னும் மந்திரமோ அவர்களின் மனதிலிருந்தும் வாயிலிருந்தும் வெளிவரும் முதல் வார்த்தைகளாக இருக்கும்.
மந்திரங்கள் மக்களின் வாழ்க்கையிலும் பல ஆன்மீக மற்றும் மத வழிபாடுகளிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. பல்வேறு வகையான பாராயணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள தகவல்கள் மற்றும் கதை ஆகியவற்றில், மக்கள் கேட்கும் பொதுவான ஒரு விஷயம் ஒரு மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும் என்பதாகும்.
ஒரு மந்திரத்தை 108 முறை ஜபிப்பதால் பல பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது, அதற்கான காரணம் என்ன மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். எண் கணிதத்தில் 108 எண் கணிதம் என்பது எண்களைப் பற்றிய ஆய்வு ஆகும், இது மக்களின் பண்புக்கூறுகள், குணங்கள், அவர்களின் இயல்பு மற்றும் பலவற்றை தீர்மானிக்க உதவுகிறது. மேலும் எண் கணிதத்தில் 108 என்ற எண்ணுக்கு ‘1+0+8=9’ என்று கணக்கிடப்படுகிறது.
எண் 9 மிகவும் அதிர்ஷ்டமான, சக்திவாய்ந்த மற்றும் மங்களகரமான எண்ணாக கருதப்படுகிறது. 9 மற்றும் 12 இரண்டாலும் வகுபடும், 108 ஆற்றல்களின் ஒற்றுமையைக் குறிக்கிறது, 1 உச்சநிலையைக் குறிக்கிறது ஏகா, 0 வெறுமை அல்லது ஒன்றுமில்லாததைக் குறிக்கிறது மற்றும் 8 நேர்மறையைக் குறிக்கிறது. பின்னர், அனைத்தின் கூட்டுத்தொகை, 9, முடிவிலி மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியது. இவ்வாறு, ஒரு மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது தனிமனிதனை ஏகா, வெறுமை மற்றும் நேர்மறையின் தாளத்துடன் சீரமைக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆற்றல்களை ஒருங்கிணைக்கிறது யோக மரபில், மனித உடல் பிரபஞ்சத்தின் மிகச் சிறிய பகுதியாகவே பார்க்கப்படுகிறது. இந்த உடல், நிலைத்திருக்க, பலவிதமான ஆற்றல் மையங்கள் அல்லது ‘சக்கரங்கள்’ உள்ளன. 108 ஆற்றல் கோடுகள் ஒன்றிணைந்து இதய சக்கரத்தை உருவாக்குகின்றன என்று நம்பப்படுகிறது, இது ஒரு மனிதனின் அனைத்து உயிர்களுக்கும் மையமாகும்.

எனவே ஒரு மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது இந்த ஆற்றல் மையங்களை செயல்படுத்துவதாகவும், சக்கரங்களை சுத்தப்படுத்துவதாகவும், உடல் முழுவதும் ‘பிராணன்’ சீராக செல்வதற்கு உதவுவதாகவும் கருதப்படுகிறது. இது மனதையும், உடலையும், ஆன்மாவையும் அமைதிப்படுத்துகிறது மற்றும் உள் அமைதியைப் பராமரிக்க உதவுகிறது.

108 ஏன் முக்கிய எண்ணாக உள்ளது? 108 எண் மற்றும் மந்திரத்தின் முக்கியத்துவம் பல்வேறு காரணங்களைக் கொண்டுள்ளது. 108 என்ற எண் பண்டைய நூல்கள், மத நூல்கள் மற்றும் கலாச்சார நடைமுறைகளில் பல முறை தோன்றுகிறது மற்றும் உண்மையில், இந்து மதத்தில், 108 உபநிடதங்கள் உள்ளன. மேலும், இந்துக் கடவுள்களுக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன, அவற்றின் எண்ணிக்கையும் 108 ஆகும்.

 

உதாரணமாக, சிவபெருமானுக்கு 108 வெவ்வேறு பெயர்கள் உள்ளன, அதேபோல கிருஷ்ணருக்கும் 108 பெயர்கள் உள்ளன. அறிவியல்ரீதியாகவும், சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தை விட 108 முதல் 109 மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

 

நீங்கள் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த விரும்பினால் அல்லது எதையாவது மனப்பாடம் செய்ய விரும்பினால், அதை முடிந்தவரை பல முறை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் என்பது சிறுவயது முதலே நமக்கு கற்பிக்கப்படுகிறது. இவ்வாறு திரும்பத் திரும்பச் செய்வது செறிவு மற்றும் தியானத்திற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.

 

ஒரு மந்திரத்தை 108 முறை உச்சரிக்க கவனம் மற்றும் நினைவாற்றல் தேவைப்படுகிறது, இது அமைதியற்ற மனதை அமைதிப்படுத்தவும், ஒருவரின் உள் அமைதியை பராமரிக்கவும் உதவுகிறது. ஒரு பக்தன் மந்திரத்தை திரும்பத் திரும்பச் சொல்லும்போது, அவருடைய மனதில் இருந்த குழப்பங்கள் மெல்ல மெல்ல மறைந்து, அமைதி உணர்வு ஏற்படுகிறது. சமஸ்கிருந்த எழுத்துக்கள் சமஸ்கிருத எழுத்துக்களில் 54 எழுத்துக்கள் உள்ளன.

 

ஒவ்வொன்றும் ஆண்பால் மற்றும் பெண்பால் உள்ளது, சிவன் ஆண்பால், மற்றும் சக்தி பெண்பால். எனவே 54 X 2=108. மேலும் மனிதர்களின் ஆத்மா தனது பயணத்தில் 108 நிலைகளைக் கடந்து செல்கிறது. அதேபோல 108 உபநிடதங்கள் உள்ளன, எனவே மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது நன்மை பயக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here