எனவே ஒரு மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது இந்த ஆற்றல் மையங்களை செயல்படுத்துவதாகவும், சக்கரங்களை சுத்தப்படுத்துவதாகவும், உடல் முழுவதும் ‘பிராணன்’ சீராக செல்வதற்கு உதவுவதாகவும் கருதப்படுகிறது. இது மனதையும், உடலையும், ஆன்மாவையும் அமைதிப்படுத்துகிறது மற்றும் உள் அமைதியைப் பராமரிக்க உதவுகிறது.
108 ஏன் முக்கிய எண்ணாக உள்ளது? 108 எண் மற்றும் மந்திரத்தின் முக்கியத்துவம் பல்வேறு காரணங்களைக் கொண்டுள்ளது. 108 என்ற எண் பண்டைய நூல்கள், மத நூல்கள் மற்றும் கலாச்சார நடைமுறைகளில் பல முறை தோன்றுகிறது மற்றும் உண்மையில், இந்து மதத்தில், 108 உபநிடதங்கள் உள்ளன. மேலும், இந்துக் கடவுள்களுக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன, அவற்றின் எண்ணிக்கையும் 108 ஆகும்.
உதாரணமாக, சிவபெருமானுக்கு 108 வெவ்வேறு பெயர்கள் உள்ளன, அதேபோல கிருஷ்ணருக்கும் 108 பெயர்கள் உள்ளன. அறிவியல்ரீதியாகவும், சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தை விட 108 முதல் 109 மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.
நீங்கள் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த விரும்பினால் அல்லது எதையாவது மனப்பாடம் செய்ய விரும்பினால், அதை முடிந்தவரை பல முறை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் என்பது சிறுவயது முதலே நமக்கு கற்பிக்கப்படுகிறது. இவ்வாறு திரும்பத் திரும்பச் செய்வது செறிவு மற்றும் தியானத்திற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.
ஒரு மந்திரத்தை 108 முறை உச்சரிக்க கவனம் மற்றும் நினைவாற்றல் தேவைப்படுகிறது, இது அமைதியற்ற மனதை அமைதிப்படுத்தவும், ஒருவரின் உள் அமைதியை பராமரிக்கவும் உதவுகிறது. ஒரு பக்தன் மந்திரத்தை திரும்பத் திரும்பச் சொல்லும்போது, அவருடைய மனதில் இருந்த குழப்பங்கள் மெல்ல மெல்ல மறைந்து, அமைதி உணர்வு ஏற்படுகிறது. சமஸ்கிருந்த எழுத்துக்கள் சமஸ்கிருத எழுத்துக்களில் 54 எழுத்துக்கள் உள்ளன.
ஒவ்வொன்றும் ஆண்பால் மற்றும் பெண்பால் உள்ளது, சிவன் ஆண்பால், மற்றும் சக்தி பெண்பால். எனவே 54 X 2=108. மேலும் மனிதர்களின் ஆத்மா தனது பயணத்தில் 108 நிலைகளைக் கடந்து செல்கிறது. அதேபோல 108 உபநிடதங்கள் உள்ளன, எனவே மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது நன்மை பயக்கும்.




















