லோரியில் இருந்து விழுந்த 100 கிலோ இரும்புத் தண்டு காரை கண்ணாடியை உடைத்ததில் ஆடவர் பலி: 4 பேர் உயிர் தப்பினர்

பத்து பஹாட்டில் இன்று காலை ஒரு டிப்பர் லோரியில் இருந்து 100 கிலோ எடையுள்ள நீண்ட தண்டு இணைப்பான் கழன்று சாலையில் விழுந்த போது அந்நேரம் சாலையில் பயணத்தவரின் கார் கண்ணாடியை உடைத்ததில் 63 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். ஸ்ரீ காடிங் அருகே உள்ள ஜாலான் ஸ்ரீ பெங்கலில் காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

பாதிக்கப்பட்ட ஜுஹாரி முரிட், செங்காரங்கிலிருந்து செகாமட்டில் உள்ள ஃபெல்டா பெமானிஸுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் பயணித்துக் கொண்டிருந்தார். ஜூஹாரி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது மனைவி ஜைனா காலித், 58, கார் ஓட்டுநர் உட்பட மூன்று உறவினர்கள் காயமின்றி தப்பினர். உயிரிழந்தவரின் மகள் நூர் ஷாஹின், 31, இந்த மரண சம்பவம் குறித்து உறவினர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார். பத்து பஹாட் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ஷாருலானுவார் முஷாதத் அப்துல்லா சானி, சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here