நாட்டிலுள்ள 528 தமிழ்ப் பள்ளிகளில் மூன்று மட்டுமே பாழடைந்தவை என நாடாளுமன்றத்தில் தகவல்

கோலாலம்பூர்: நாடு முழுவதும் உள்ள 528 தமிழ்ப் பள்ளிகளில் மூன்று மட்டுமே பாழடைந்தவை என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாத தரவுகளின் அடிப்படையில், அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகல் பாழடைந்த கட்டிட வகையின் 7 ஆம் அளவுகோலின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று டிசம்பர் 3 தேதியிட்ட நாடாளுமன்ற எழுத்துப்பூர்வ பதிலில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் SJK(T) உள்கட்டமைப்பை மேம்படுத்த பல நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அது கூறியது. அவற்றில், 12ஆவது மலேசியா திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட, சிலாங்கூரில் உள்ள SJK(T) டெங்கில் மாற்று கட்டிடம் கட்டுவதும் அடங்கும். இதற்கிடையில், ஒரு பாழடைந்த கட்டிடத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், பேராக், SJK(T) கோப்பெங்கிற்கு ஒரு புதிய தொகுதியைச் சேர்க்கவும் விண்ணப்பம் 13ஆவது மலேசியா திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டது என்று அது மேலும் கூறியது.

பேராக் மாநிலத்தில் அதிகபட்சமாக 134 SJK(T) பள்ளிகள் உள்ளன. அதைத் தொடர்ந்து சிலாங்கூர் (99), ஜோகூர் (71), நெகிரி செம்பிலான் (61), கெடா (60), பகாங் (37), பினாங்கு (28), மலாக்கா (21), கோலாலம்பூர் (15), கிளந்தான், பெர்லிஸ் (தலா ஒன்று). டத்தோஸ்ரீ எம். சரவணன் (BN-Tapah) நாட்டில் உள்ள தற்போதைய தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கையையும், பாழடைந்த நிலையில் உள்ள பள்ளிகள் உட்பட, இந்தப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான அமைச்சகத்தின் திட்டங்களையும் கேட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here