கோலாலம்பூர்,, டிசம்பர் 5 –
சட்ட வரம்பை மீறிப் புகை மற்றும் வாயுக்களை வெளியிடும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள், தற்போதைய RM2,000 வரம்பை விட வெகுவாக அதிகரிக்கலாம் என்று சுற்றுச்சூழல் இலாகா இயக்குநர் ஜெனரல் டத்தோ வான் அப்துல் லத்தீஃப் வான் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் தரச் சட்டம் மற்றும் தூய்மையான காற்று விதிமுறைகளில் சமீபத்தியத் திருத்தங்கள், நீதிமன்ற அபராதத்தை RM1 மில்லியன் வரையிலும், சில்லறை அபராதத்தை RM500,000 வரையிலும் விதிக்க இப்போது அனுமதிக்கின்றன.
2025 உலக ஓசோன் தினக் கொண்டாட்டத்துடன் இணைந்து நடைபெற்ற தேசிய மோட்டார் வாகனச் செயல்பாட்டு வாரத்தை தொடங்கி வைத்தபோது அவர் இதைத் தெரிவித்தார்.
மோசமாகப் பராமரிக்கப்படும் என்ஜின்கள் நகர்ப்புற காற்று மாசுபாட்டின் முக்கிய ஆதாரமாக இருப்பதால், அமலாக்கக் குழுக்கள் புகை மீட்டர்கள், வாயுப் பகுப்பாய்விகள் மற்றும் இரைச்சல் மீட்டர்களை பயன்படுத்தி டீசல், பெட்ரோல் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் நெடுஞ்சாலைச் சோதனைகளை தீவிரப்படுத்தும் என்று அவர் கூறினார்.
மலேசியாவின் 33 மில்லியனுக்கும் அதிகமான வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை முறையாகப் பராமரிக்கவும் வாகன புகை உமிழ்வை மோசமாக்கும் நிலையின்றி ஓட்டும் பழக்கங்களைத் தவிர்க்கவும் அவர் வலியுறுத்தினார்.

























