கோவா விடுதி உரிமையாளர்கள் தாய்லாந்தில் கைது

பானாஜி:
கோவாவில் உள்ள சட்டவிரோத இரவு விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, தாய்லாந்துக்கு தப்பிச் சென்ற விடுதி உரிமையாளர்கள் இருவரும் அங்குள்ள காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற தீ விபத்தின் பின்னர், விசாரணையில் அந்த இரவு விடுதி நீதிமன்றத்தின் இடிக்க உத்தரவை மீறி சட்டவிரோதமாக தொடர்ந்து இயங்கியதுடன், இதில் பொது மேலாளர் உட்பட நான்கு பேர் இதற்கு முன் கைது செய்யப்பட்டதாக கோவா காவல்துறை தெரிவித்தது. சமூக செயற்பாட்டாளர் ரவி ஹர்மல்கர் அளித்த புகாரின் பேரில் இதற்கு முன் நீதிமன்றம் இடிப்பு உத்தரவு பிறப்பித்திருந்தது.

Goa nightclub fire: Saurabh and Gaurav Luthra, brothers who owned club and  had fled to Thailand after fire killed 25, detained - India Today

உரிமையாளர்களான “லூத்ரா சகோதரர்கள்” — சௌரவ் லூத்ரா மற்றும் கௌரவ் லூத்ரா — தீவிபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே டெல்லியிலிருந்து விமானம் பிடித்து தாய்லாந்துக்கு தப்பிச் சென்றதாகத் தெரிகிறது. இதையடுத்து, அவர்களை பிடிக்க CBI, இன்டர்போல் மூலமாக சர்வதேச தேடல் அறிவித்தது.

டிசம்பர் 11, வியாழக்கிழமை, தாய்லாந்து காவல்துறை இருவரையும் கைது செய்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவர்களை இந்தியாவுக்கு மீள அழைத்து வர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும், அவர்களின் கடப்பிதழ்களை ரத்து செய்வது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சு பரிசீலித்து வருகிறது.

Goa Nightclub Owners Detained in Thailand After Fatal Fire That Killed 25 -  Bangla news

இதற்கிடையில், லூத்ரா சகோதரர்கள் டெல்லி நீதிமன்றத்தில் பிணை கோரிய மனு தாக்கல் செய்துள்ள நிலையில், கோவா அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here