பல மாநிலங்களில் மாலை 5 மணி வரை இடிமின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

கோலாலம்பூர்:

மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கோலாலம்பூர் மற்றும் லபுவான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று மாலை 5 மணி வரை இடிமின்னல், கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, மோசமான வானிலை பின்வரும் பகுதிகளில் எதிர்பார்க்கப்படுகிறது:
பகாங்கின் ஜெராண்டுட் (Jerantut), பெந்தோங் (Bentong), குவாந்தான் (Kuantan) மற்றும் பெக்கான் (Pekan) ஆகிய இடங்கள், சிலாங்கூரில் கோம்பாக் (Gombak), கோலா லங்காட் (Kuala Langat) மற்றும் உலு லங்காட் (Hulu Langat).

நெகிரி செம்பிலானின் ஜெலேபு (Jelebu) பகுதி, சரவாக்கின் சரிக்கே (Sarikei), சிபு (Sibu), முக்கா (Mukah), பிந்துலு (Bintulu), மிரி (Miri) மற்றும் லிம்பாங் (Limbang) மற்றும் சபாவின் உட்புறப் பகுதிகள் (சிபித்தாங், கோலா பென்யு, பியூபர்ட் மற்றும் தம்புனான்), மேற்கு கடற்கரை, தவாவ், சந்தாக்கான் மற்றும் கூடாட் ஆகிய இடங்களில் இந்த வானிலையை எதிர்பார்க்கலாம் என அது தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் வானிலை மாற்றங்களைக் கவனித்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலதிக தகவல்களுக்கு MetMalaysia அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here