இந்த நிலையில் ராணாவின் திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரும் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்து வருகிறார்கள். இந்த திருமணத்தில் தெலுங்கு நடிகர்கள் பிரபாஸ், வருண் தேஜ், ராம்சரண் உள்பட பலர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.