மலேசியாவின் 6 மாநிலங்களுக்கு இன்று மாலை வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை எச்சரிக்கை!

கோலாலம்பூர்:

மலேசியாவின் ஆறு மாநிலங்களில் இன்று மாலை 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பின்வரும் பகுதிகளில் மோசமான வானிலை நிலவக்கூடும்: கெடா (Kedah): கூலிம் (Kulim) மற்றும் பண்டார் பாரு (Bandar Baharu), மற்றும் பினாங்கு (Penang): மாநிலத்தின் அனைத்துப் பகுதிகள், பேராக் (Perak): கிரியான் (Kerian), மஞ்சோங் (Manjung), பாகன் டத்தோ (Bagan Datuk), லாருட், மாடாங் மற்றும் செலாமா (Larut, Matang, Selama), ஜொகூர் (Johor): பொந்தியான் (Pontian), கூலாய் (Kulai) மற்றும் ஜொகூர் பாரு (Johor Bahru) ஆகிய இடங்களிலும், மேலும் சரவாக் (Sarawak): கூச்சிங் (பாவு, கூச்சிங்), செரியான் (Serian), சமரஹான் (Asajaya) மற்றும் காபிட் (Song, Kapit, Bukit Mabong), மற்றும் சபா (Sabah): உட்புறப் பகுதிகள் (நபாவான், தம்புனான்), மேற்கு கடற்கரை (புத்தாத்தான், பெனாம்பாங், கோட்டா கினபாலு, துவாரான், ரானாவு, கோத்தா பெலுட்), தாவாவ் (Tawau) மற்றும் கூடாட் (Kudat) ஆகிய இடங்களும் இந்த வானிலையை எதிர்கொள்ளும்.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகும் போதும், அந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் போதும் இத்தகைய இடி மின்னல் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

வானிலை ஆய்வு மையத்தின்படி, இந்த இடி மின்னல் எச்சரிக்கையானது அதிகபட்சம் ஆறு மணி நேரம் வரை மட்டுமே செல்லுபடியாகும் குறுகிய கால எச்சரிக்கையாகும். எனவே, பொதுமக்கள் தங்களது பயணங்களைத் திட்டமிடும்போது வானிலை நிலவரத்தைக் கவனித்துச் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here