தை வெள்ளி நாக வழிபாடு

    இந்திய மக்கள் நாகப்பாம்புகளை தெய்வமாகவே கருதுகின்றனர். வீட்டுச் சுவர்களில் நல்ல பாம்பின் உருவம் வரைந்து, அதை மஞ்சள், சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் அலங்கரித்து, உரிய நிவேதனம் படைத்து வழிபடுவார்கள். அதே போல் பாம்புப் புற்றை மஞ்சள், குங்குமத்தால் அலங்கரித்து, புற்றுக்குள் பாலூற்றி நாகராஜாவை வழிபடுவார்கள். நாகத்தை முறைப்படி வழிபட்டால் குடும்பத்தில் வளமும் அதிர்ஷ்டமும் பெருகும் என்பது நம்பிக்கை.

    பாம்புகளால் நிலம் வளம்பெறுகிறதென்றும், பாம்புகளை வழிபடுவதால் தங்கள் குடும்பத்தில் செல்வவளம் பெருகி நிலைக்கு மென்றும் மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் கோவில், குளக்கரை அல்லது அரச மரத்தடி போன்ற இடங்களில் பாம்பு வடிவம் செதுக்கப்பட்டகற்கள் நடப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. நாகராஜாவை தெய்வமாக வழிபடும் வழக்கம் காலம் காலமாக தொடர்ந்து வந்துள்ளது.

    இந்தியா மட்டுமின்றி உலகின் பல பாகங்களிலும், நீர்வளம், நீடித்த ஆயுள், நிறைசெல்வம் ஆகியவற்றைத் தரும் தெய்வமாக எண்ணி நாகத்தை மக்கள் வழிபாடு செய்கிறார்கள். ஆடி மாதத்தை போல் அம்பிகை வழிபாட்டிற்கு மிகவும் உகந்த தை மாத வெள்ளிக்கிழமையிலும் நாக வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்த, சக்தி வாய்ந்த வழிபாடாக கருதப்படுகிறது.

    நாகராஜ துதி :

    “ஓம் அனந்தம் வாஸுகிம் சேஷம் பத்மநாபம் ஸகம்பலம்

    ஸங்கபாலம் த்ருதராஷ்டிரம்: தட்சகம் காளியம் ததா:

    ஏதானி நவ நாமானி சமகாத்மனாம் சாயங்காலே படேந்நித்யம்

    ப்ராதாகாரல விசேஷதக நஸ்யவிஷ பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீபவேத்.”

    அனந்தன், வாசுகி, குஷகாயன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்கோடன், குளிஜன், பத்மன் என்னும் ஒன்பது நாகங்கள் தெய்வத்தன்மை மிகுந்தவை. இவைகளை வெள்ளிக்கிழமை, பஞ்சமி, பெளர்ணமி உள்ளிட்ட தினங்களில் வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.

    அனந்தன், வாசுகி, ஆதிசேஷன், பத்மநாபன், கம்பலன், சங்கபாலன், த்ருதராஷ்டிரன், தட்சகன், காளியன் முதலான ஒன்பது நாக ராஜாக்களே நமஸ்காரம். ராகு-கேது கிரகங்கள் மற்றும் பிற நாக தோஷங்களை விலக்கி நற்கதி அருள்வீராக. தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் நாகராஜனின் ஸ்லோகத்தை மூன்று முறை சொல்லி வந்தால் நாக தோஷங்கள் விலகி பலன் பெறலாம்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here