குளுவாங்கில் கேபிள் திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவர் கைது

குளுவாங்:

சிம்பாங் ரெங்காமில் உள்ள ஒரு கிராமத்தில் கேபிள்களை திருடிய சந்தேகத்தின்பேரில் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 மற்றும் 29 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதன் மூலம், குறைந்தது ஆறு கேபிள் திருட்டு வழக்குகளுக்கு தீர்வு காணலாம் என நம்பப்படுகிறது என்று, சிம்பாங் ரெங்காம் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் பஹ்ரின் முகமட் நோ கூறினார்.

மேலும் அங்குள்ள கம்போங் ஷாரியைச் சேர்ந்த ஒருவர் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து, மார்ச் 19 அன்று இரவு 9.30 மணியளவில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

“இரண்டு சந்தேக நபர்களும் மெத்தம்பேட்டமைன் பாவித்ததாக சிறுநீர் பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அத்தோடு அவர்களில் ஒருவருக்கு குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான முந்தைய பதிவு உள்ளது என்றும், மற்றவருக்கு போதைப்பொருள் சம்மந்தமான முந்தைய பதிவும் உள்ளது,” என்று அவர் சொன்னார்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் 431A பிரிவின் கீழ் விசாரணை செய்யப்படும் என்றும், இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு வருட சிறைத்தண்டனையை சந்திக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here