தோனி வந்தால் எல்லாம் சரியாகுமா?

2026 ஐபிஎல் தொடர் மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை 11 போட்டிகள் முடிவடைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதில் மூன்று போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இந்த மூன்று போட்டிகளிலுமே தோல்வியை தழுவி தனது வெற்றி கணக்கை இன்னும் தொடங்காமல் இருக்கிறது சிஎஸ்கே அணி.

கம்பேக் கொடுக்குமென எதிர்பார்ப்பு  

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த இரண்டு சீசன்களாகவே தடுமாறு வருகிறது. அதிலும் குறிப்பாக 2025 ஐபிஎல் தொடர் அவர்களுக்கு ஒரு மோசமான சீசனாக அமைந்தது. அத்தொடரில் 14 லீக் ஆட்டங்களில் விளையாடி வெறும் 4ல் மட்டுமே வெற்றி பெற்றது. இதன்மூலம் அவர்கள் அத்தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறினர். இது சிஎஸ்கே அணிக்கு ஒரு பெரிய அடியாக இருந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஒரு வலுவான கம்பேக்கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தொடர் தோல்விகளை சந்தித்து தற்போது படுகுழியில் உள்ளது.

என்னதான் பிரச்சனை

சிஎஸ்கே அணியில் சரியான வீரர்கள் இல்லாத நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நடந்த மினி ஏலத்தில் சில நல்ல வீரர்களை வாங்கினர், சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து டிரெட் செய்தனர். ஆனால் அதற்காக ரவீந்திர ஜடேஜாவை விட்டுக்கொடுத்து ரசிகர்களின் மனதை உடைத்தனர். சரி அதனை சரி செய்யும் வகையில் அணியின் செயல்பாடு இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், அதிலும் ஏமாற்றம் அடைய செய்தனர்.

சிஎஸ்கே அணி நல்ல வீரர்களை எடுத்தாலும், சில வீரர்களை தவறவிட்டனர். அதாவது, கூப்பர் கானொலி, ஜெய்சன் ஹொல்டர், டேவிட் மில்லர் போன்ற வீரர்களை தவறவிட்டனர். ஜெய்சன் ஹொல்டர் போன்ற வீரர்களை சிஎஸ்கே எடுத்திருந்தால், கூடுதல் பலம் கிடைத்திருக்கும். மேதீவ் ஷாட்டை வாங்கி வெளியே அமர வைத்துள்ளனர். அதேபோல், பிரசாந்த் வீர் போன்ற உள்ளூர் வீரர்களை ரூ. 14 கோடிக்கு எடுத்துவிட்டு அவரை முழுமையாக பயன்படுத்தாமல் இருக்கின்றனர். கடந்த இரண்டு போட்டிகளிலும் அவரை கொண்டு வந்து பேட்டிங்கில் மட்டும் பயன்படுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here