லங்காவி மற்றும் ஜோகூரின் சில பகுதிகளில் இன்று நண்பகல் வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

கோலாலம்பூர், ஏப்ரல் 15:

லங்காவி (Kedah) மற்றும் ஜோ கூர் மாநிலத்தின் சில பகுதிகளில் இன்று நண்பகல் வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று, மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia), எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று காலை 9 மணிக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கையின்படி, லங்காவி (கெடா) மற்றும் ஜோகூரின் கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய பகுதிகளில் மோசமான வானிலை நிலவ வாய்ப்புள்ளது:

ஒரு மணி நேரத்திற்கு 20 மி.மீ-க்கும் அதிகமான மழைப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீசுவதற்கான அறிகுறிகள் தென்படும்போது, இதுபோன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. இந்த மோசமான வானிலை காரணமாகப் பொதுமக்கள் பயணங்களைத் திட்டமிடும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இடி மற்றும் மின்னல் தாக்கும் அபாயம் இருப்பதால், மக்கள் திறந்தவெளிகளில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வானிலை குறித்த சமீபத்திய தகவல்களைத் தெரிந்துகொள்ள, வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அதன் சமூக வலைதளப் பக்கங்களைத் தொடர்ந்து கவனித்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here