ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் சேதுபதி

ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடங்கள் என அனைத்திலும் தன் திறமையை நிரூபித்து, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் விஜய் சேதுபதி.
தற்போது விஜய் சேதுபதியின் ட்விட்டர் கணக்கை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தொட்டிருக்கிறது. இதனால் தனது ரசிகர்கள் மற்றும் பின் தொடர்பவர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் கையில் ‘ஒ’என்ற எழுத்துடன் நிற்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here