ஜார்ஜ் டவுனில் நிர்வாண நபர் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தினார்

ஜார்ஜ் டவுன்:  லெபு புக்கிட் ஜம்புல் சாலையில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நிர்வாணமாக நடந்து சென்றதால் போக்குவரத்து தடை ஏற்பட்டது. வியாழக்கிழமை (ஏப்ரல் 16) காலை சுமார் 10 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ஜார்ஜ் டவுன் காவல் துறை துணை கண்காணிப்பாளர் லீ ஸ்வீ சாகே தெரிவித்தார்.

அந்த நபர் மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுவதாகவும், பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார். நோயாளியை மருத்துவமனைக்குத் திரும்ப அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸுக்குப் பாதுகாப்பு அளிக்க காவல்துறை உதவியை மலேசிய செஞ்சிலுவை சங்கம் கோரியுள்ளது  என்று அவரைத் தொடர்புகொண்டபோது கூறினார். இணையத்தில் பரவி வரும் 25 வினாடி காணொளி ஒன்றில், அந்த நபர் சாலையின் நடுவில் நின்று கொண்டு, எதிரே வரும் வாகனங்களை வழிநடத்துவது தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here