மில்லியன் கணக்கிலான சொகுசு கார்கள்: சாலை வரி செலுத்தாதது குறித்து RTD அதிர்ச்சி!

நெகிரி செம்பிலான்:

விலையுயர்ந்த சொகுசு கார்களை ஓட்டுபவர்கள் சாலை வரி மற்றும் காப்பீடு இல்லாமல் சிக்கியிருப்பது தமக்கு வியப்பளிப்பதாக நெகிரி செம்பிலான் சாலைப் போக்குவரத்துத் துறை (RTD) இயக்குநர் ஜசிந்தர் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

பிடிபட்டவர்களில் பல ‘டத்தோ’ (Datuk) பட்டம் பெற்றவர்களும், உயர்மட்டத் தொழில்முறை வல்லுநர்களும் அடங்குவர். குறிப்பாக 40 வயதுகளில் உள்ள ஒரு ‘டத்தோ’வின் கார் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தம் 143 சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 7 போர்ஷே (Porsche), 11 ஆடி (Audi), 21 ஆல்ஃபார்ட்/வெல்ஃபயர், 30 மெர்சிடிஸ் மற்றும் 35 பிஎம்டபிள்யூ (BMW) கார்கள் அடங்கும்.

இந்த ஆண்டு முதல் நான்கு மாதங்களில் மட்டும் 45 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

“மில்லியன் கணக்கில் பணம் கொடுத்து சொகுசு கார் வாங்க முடிந்தவர்களால், அதற்கான சாலை வரி மற்றும் காப்பீட்டுத் தொகையைச் செலுத்த முடியாதது ஆச்சரியமாக இருக்கிறது,” என ஜசிந்தர் சிங் தெரிவித்தார்.

தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில், முறையாக வாகன உரிமம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டிய வெளிநாட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, கடந்த ஆண்டு 335 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேநேரம் இந்த ஆண்டு இதுவரை 175 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

இதில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here