சென்னை, நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி குறித்து அவதூறு கருத்துகளைப் பேச பாடகி கெனிஷா பிரான்சிஸுக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
ரவி மோகனின் தோழி கெனிஷா பிரான்சிஸ். இவர் ஆர்த்தி ரவி குறித்து அவதூறு கருத்துகளை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கெனிஷா தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட்டு வருவதாக சென்னை ஐகோர்ட்டில் ஆர்த்தி ரவி மனு தாக்கல் செய்தார். மேலும், இது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.





















