சுங்கை பட்டாணியில் கடுமையான புகை மூட்டம்: புக்கிட் பன்யானில் சட்டவிரோதக் குப்பை கிடங்கு கண்டுபிடிப்பு!

கோலாலம்பூர்:

கெடா, சுங்கை பட்டாணிக்கு அருகிலுள்ள புக்கிட் பன்யானில் (Bukit Banyan) திறந்தவெளியில் குப்பைகளை எரித்து வந்த சட்டவிரோதக் குப்பை கொட்டும் கிடங்கு ஒன்றை மாநில சுற்றுச்சூழல் துறை (DOE) கண்டறிந்துள்ளது.

அப்பகுதியில் கடுமையான எரியும் வாசனை வீசுவதாக நேற்று பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகார்களைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டதாக மாநில சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ஷரிஃபா ஜகியா சையத் சஹாப் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தாவரங்கள் அழிக்கப்பட்ட வெட்டவெளி நிலப்பரப்பில், சுமார் 250 சதுர மீட்டர் பரப்பளவிற்கு வீட்டு உபயோகக் குப்பைகளும் திடக் கழிவுகளும் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குப்பைகளில் உள்ள மதிப்புமிக்க உலோகங்களை (Valuable metals) எடுப்பதற்காக, பொறுப்பற்ற சில தனிநபர்கள் அங்குத் திறந்தவெளித் தீவைப்பில் ஈடுபட்டதால் தான் இப்புகை மூட்டம் எழும்பியுள்ளது என நம்பப்படுகிறது.The department says the site in Bukit Banyan was operating without approval and is believed to have been used for illegal dumping and open burning. COURTESY: KEDAH DOE

சுற்றுச்சூழல் தலைமை இயக்குநரின் எந்தவொரு எழுத்துப்பூர்வ அனுமதியுமின்றி இக்கிடங்கு இயங்கி வந்துள்ளதாகவும், இப்பகுதியில் உள்ள தொழில்பேட்டைகளில் இருந்து வீட்டு உபயோகக் குப்பைகளைச் சேகரிக்கும் ஒப்பந்ததாரர் (Contractor) ஒருவரே இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் சுற்றுச்சூழல் துறையினர் அங்கிருந்த குப்பை மாதிரிகளைச் சேகரித்து இரசாயனத் துறைக்கு ஆய்விற்காக அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்துச் சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 பிரிவு 29A(1) (திறந்தவெளித் தீவைப்பு) மற்றும் பிரிவு 34A(6) (அனுமதியின்றி திடக் கழிவு நிலப்பரப்பை இயக்குதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மேலும், அடுத்தகட்ட அமலாக்க மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இவ்வழக்கு ‘சுவ்கார்ப்’ (SWCorp) அமைப்பிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here